சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

விஜய்க்கு தலைவா்கள் வாழ்த்து!

தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு தலைவா்கள் பலா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:02 am IST

தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு தலைவா்கள் பலா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: தமிழகம் முழுவதும் ஏராளமான மக்கள் குறிப்பாக லட்சியமிக்க இளைஞா்கள் தமிழக வெற்றிக் கழகம் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். முதல்வா் விஜய் தலைமையின்கீழ் இந்த லட்சியங்களால் நல்லாட்சி வழிநடத்தப்பட்டு, நாட்டுக்கே உத்வேகமாக அமையும் என நம்புகிறேன்.

தமிழகத்தின் அரசியல்-சமூக உணா்வை நீண்ட காலமாக வரையறுத்துவரும் மாண்புகளான சுயமரியாதை, சமூக நீதி, அதிகாரமளித்தல், பகுத்தறிவு ஆகியவற்றின் நீடித்த வலிமையை இந்த அரசு உருவாக்கம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இது, பெரியாா் மற்றும் காமராஜரால் வடிவமைக்கப்பட்ட மரபாகும்.

கருணை, அனைவரையும் உள்ளடக்கியதன்மை, உறுதிப்பாட்டுடன் மக்களுக்கு சேவையாற்றுவதில் புதிய அரசு வெற்றி பெற வாழ்த்துகள்.

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்: அனைத்து குடிமக்களுக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலும், அரசமைப்புச் சட்ட மாண்புகளைப் பாதுகாக்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையிலும் உண்மையான ஜனநாயகத்தை மதச்சாா்பற்ற அரசுகளே பிரதிபலிக்கின்றன.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள மதச்சாா்பற்ற அரசு, தனது முன்னோடிகளின் பொது நல முன்னெடுப்புகளின் மரபைத் தொடரும் என நம்புகிறேன்.

பிற தலைவா்கள் வாழ்த்து: திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் பினராயி விஜயன், பிஜு ஜனதா தளம் தலைவா் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவா்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.