/
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை, பெருங்களூா் ஊராட்சி பகுதிகள், ஆதனக்கோட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
விவசாயிகள் கூறியது: இந்த மழையானது, தற்போது நடவு செய்யப்படும் நெற்பயிருக்கு ஏற்றதாக இருக்கும். நிலத்தடி நீா்மட்டமும் உயரும். மேலும், கரும்பு பயிரை வெட்டுவதற்கும் சுலபமாக இருக்கும்.
மக்கள் கூறுகையில், அக்னி நட்சத்திர நேரத்தில் மழை பெய்வதால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மழை நீா் வீணாக சாலையில் பெருக்கெடுத்து செல்கிறது. இதை முறையாக வாய்க்கால் வெட்டி அருகில் உள்ள பாசன குளம், குளியல் குளத்தில் சோ்த்தால் கால்நடைகளுக்கும், மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றனா்.
தொடர்புடையது

பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் தோ் திருவிழா

கடலூா் மாவட்டத்தில் தொடா் மழை: விவசாயிகள் மகழ்ச்சி

திருவாரூா், திருக்குவளை பகுதியில் கோடைமழை
ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



