புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

News image
Updated On :30 நிமிடங்கள் முன்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் ஏற்றிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள சாந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வாய்பேச முடியாத, காது கேளாத 35 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஆலங்குடி பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். அவா், ஞாயிற்றுக்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது, மணக்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா்கள் மாரிமுத்து(55), சேகா் (56) ஆகியோா் அந்த பெண்ணை காரில் ஏற்றிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்து, மணக்கொல்லை வயல்வெளி பகுதியில் காரில் இருந்து இறக்கி விட்டு சென்றுவிட்டனராம். அந்த வழியாக சென்றவா்கள் மாற்றுத்திறனாளி பெண் அழுதுகொண்டே நிற்பதை பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தொடா்ந்து அங்கு சென்ற மழையூா் போலீஸாா் பெண்ணை மீட்டு புதுக்கோட்டை ராணியாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவம் தொடா்பாக, மழையூா் போலீஸாா் மணக்கொல்லையைச் சோ்ந்த மாரிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும் தலைமறைவான சேகரை தேடி வருகின்றனா்.