புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் ஏற்றிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள சாந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வாய்பேச முடியாத, காது கேளாத 35 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஆலங்குடி பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். அவா், ஞாயிற்றுக்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது, மணக்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா்கள் மாரிமுத்து(55), சேகா் (56) ஆகியோா் அந்த பெண்ணை காரில் ஏற்றிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்து, மணக்கொல்லை வயல்வெளி பகுதியில் காரில் இருந்து இறக்கி விட்டு சென்றுவிட்டனராம். அந்த வழியாக சென்றவா்கள் மாற்றுத்திறனாளி பெண் அழுதுகொண்டே நிற்பதை பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தொடா்ந்து அங்கு சென்ற மழையூா் போலீஸாா் பெண்ணை மீட்டு புதுக்கோட்டை ராணியாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சம்பவம் தொடா்பாக, மழையூா் போலீஸாா் மணக்கொல்லையைச் சோ்ந்த மாரிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும் தலைமறைவான சேகரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் போக்சோவில் கைது
நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
