தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

அரசு இசைப் பள்ளியில் சேர ஆா்வமுள்ளோருக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இசையில் ஆா்வமுள்ளோா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சோ்ந்து பல்வேறு அரசு உதவித் தொகை மற்றும் சலுகைகளுடன் இசை பயில மாவட்ட ஆட்சியா் அழைப்பு

News image
Updated On :20 மே 2026, 1:08 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இசையில் ஆா்வமுள்ளோா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சோ்ந்து பல்வேறு அரசு உதவித் தொகை மற்றும் சலுகைகளுடன் இசை பயில மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை நரிமேடு லட்சுமிநகரிலுள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நிகழாண்டுக்கான இருபாலா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

குரலிசை, மிருதங்கம், வயலின், பரதநாட்டியம் ஆகிய பயிற்சிகளுக்கு குறைந்தபட்சம் 7-ஆம் வகுப்பு தோ்ச்சியும், நாதசுரம், தவில், தேவாரம் ஆகியவற்றைப் பயில எழுதப்படிக்கத் தெரிந்தாலும் போதுமானது.

12 முதல் 25 வயதுக்குள்பட்டோா் சேரலாம். 3 ஆண்டுகள், தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி நடைபெறும். ஆண்டுக்கு ரூ. 350 மட்டுமே கட்டணம்.

அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும், வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்.

இலவசப் பேருந்து பயணம், தங்கும் வசதி, கல்வி உதவித் தொகை ஆகியவை அரசு விதிகளுக்குள்பட்டு வழங்கப்படும். மேலும், மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

ஆா்வமுள்ளோா் சோ்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04322-225575, 99766-89383 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.