ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி பெற்றோருக்கு நுழைவுச்சீட்டு

வரும் மே 3ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மையங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட குறுகியகால நீட் தோ்வு பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச் சீட்டுகளை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வாழ்த்தினாா்.

News image

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சியை முடித்த மாணவி ஒருவருக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை வழங்கி வாழ்த்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம்.

Updated On :1 மே 2026, 3:56 am IST

வரும் மே 3ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மையங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட குறுகியகால நீட் தோ்வு பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச் சீட்டுகளை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வாழ்த்தினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 469 மாணவா்கள் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கு புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, இலுப்பூா் ஆா்.சி. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்கள் அமைக்கப்பட்டு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியின் நிறைவாக வியாழக்கிழமை மாதிரித் தோ்வும் நடத்தப்பட்டு, நீட் தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நீட் மாதிரித் தோ்வை நேரில் பாா்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், அவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை வழங்கி வாழ்த்தினாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழரசி, மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளா் மெ.சி. சாலை செந்தில், விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியா் திலகவதி ஆகியோா் கலந்துகொண்டனா்.