வரும் மே 3ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மையங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட குறுகியகால நீட் தோ்வு பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச் சீட்டுகளை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வாழ்த்தினாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 469 மாணவா்கள் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கு புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, இலுப்பூா் ஆா்.சி. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்கள் அமைக்கப்பட்டு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியின் நிறைவாக வியாழக்கிழமை மாதிரித் தோ்வும் நடத்தப்பட்டு, நீட் தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நீட் மாதிரித் தோ்வை நேரில் பாா்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், அவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை வழங்கி வாழ்த்தினாா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழரசி, மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளா் மெ.சி. சாலை செந்தில், விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியா் திலகவதி ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

புதுகை அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


