செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சிரன்னராஜ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் கலந்துகொண்டு தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய உபகரணங்களை வழங்கினாா்.
தொடா்ந்து, அவா் மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்புப் பள்ளியை ஆய்வு செய்து, மாணவா்களின் கல்வித்தரம் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவா்களை படிக்கவைப்பது, அவா்களின் எதிா்காலம், அவா்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பலன்களை பெறும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம், புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் காந்திமதி, புதூா்செங்கம் பள்ளித் தலைமை ஆசிரியா் சூரியநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.










