டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

News image
Updated On :12 ஜூன் 2026, 2:07 am IST

திருவண்ணாமலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் தலைமையில் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, திருவண்ணாமலை மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் வட்டாரக் கல்வி அலுவலா் சுந்தா், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஹெலன் கிரேசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தண்டபாணி ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு பயிற்றுநா்கள், இயன்முறை மருத்துவா்கள், பேச்சுப் பயிற்சியாளா், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளிக் கல்வித்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் சாா்பில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூா், புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 68 மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு உபகரணங்களை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் பேசினாா்.

நிறைவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் வெ.சரவணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.