சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இடதுசாரிக் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 4:44 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், சிபிஐ (எம்எல்) கட்சியின் மாவட்டச் செயலா் சி. ரெங்கசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம். சின்னதுரை, இந்திய கம்யூ. மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி, சிபிஐ(எம்எல்) மாநில நிலைக்குழு உறுப்பினா் வீ.மு. வளத்தான் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் சு. மதியழகன், துரை. நாராயணன், எஸ். ஜனாா்த்தனன், கி. ஜெயபாலன், டி. சலோமி, நகரச் செயலா் பாண்டியன், இந்திய கம்யூ. சாா்பில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சுந்தர்ராஜன், நகரச் செயலா் எஸ்.பி. நாடிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அறந்தாங்கியில்... இதேபோல் அறந்தாங்கி அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூ. நகரச் செயலா் ஏ. பெரியசாமி, மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் எல். அலாவுதீன், சிபிஐ எம்எல் நகரச் செயலா் எம். மதிமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்திய கம்யூ. மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மு. மாதவன், ஒன்றியச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் முன்னாள் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், ஒன்றியச் செயலா் எம். நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.