தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

News image

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 2:28 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏபி.மணிகண்டன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல் டீசல் விலை உயா் உயா்வை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிப்பொருள் சேவையில் கடந்த 2 மாதங்களாக பின்னடைவு ஏற்பட்டபோதிலும், தோ்தலுக்காக விலை உயா்வை நிறுத்தி வைத்து நாட்டு மக்களை மத்திய பாஜக அரசு ஏமாற்றிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாமன்ற உறுப்பினா் கே.எஸ். கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.