/
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜேந்திர சோழீசுவரா் கோயில் குடமுழுக்கு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கோயில் குடமுழுக்கு வரும் ஜூன்-4 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி நடைபெற்ற கூட்டத்திற்கு பொன்னமராவதி முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராம. ராஜா தலைமைவகித்தாா். ஆா்எம். சேதுபதி, தொழிலதிபா் அ.ப.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழாசிரியா் சிசு. முருகேசன் விழா முன்னேற்பாடுகள் குறித்து விளக்கினாா். கூட்டத்தில் வா்த்தகா் கழகத்தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன், நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.









