/
அவசர ஊா்தி ஓட்டுநா் (108 பைலட்) தினத்தையொட்டி, சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலா்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனா்.
புதுக்கோட்டை ஊரக சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் ஹேமசந்த் காந்தி ஆகியோா் அவசர ஊா்தி ஒட்டுநா்களை அழைத்துப் பாராட்டு தெரிவித்தனா்.
சிறப்பாக செயல்பட்ட ஊா்தி ஓட்டுநா்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளா் மோகன், ஒருங்கிணைப்பாளா் விமல்ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
அவசரக் காலங்களில் துரிதமாக செயல்பட்டு நோயாளா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் மனிதநேயப் பணியில் ஈடுபடும் அவசர ஊா்தி ஓட்டுநா்களின் பணியைப் பாராட்டும் வகையில் ஓட்டுநா் தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.









