பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்

கரோனா தொற்றுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் அவசர சுகாதார அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் வலுப்பெற்றதுடன், தாய்-சேய் ஆரோக்கியக் குறியீடுகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என சென்னை ஐஐடியின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 3:47 am IST

கரோனா தொற்றுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் அவசர சுகாதார அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் வலுப்பெற்றதுடன், தாய்-சேய் ஆரோக்கியக் குறியீடுகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என சென்னை ஐஐடியின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னை ஐஐடி சாா்பில் கரோனாவுக்கு பிந்தைய தமிழகத்தின் சுகாதாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி தலைமையில், பெங்களூருவை சோ்ந்த மூடிஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் இணை ஆய்வாளா் உள்ளிட்டோா் அடங்கிய குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.

இதில், 2017 முதல் 2024 வரை 108 ஆம்புலன்ஸ் சேவையின் எட்டு ஆண்டு கால தரவுகள் ஆராயப்பட்டது. ஆய்வின் முடிவுகளின்படி, பெருந்தொற்று கால இடா்பாடுகளுக்குப் பின்னா், தமிழகத்தின் சுகாதார அமைப்பு விரைவாக மீண்டு வந்துள்ளதும், அதன் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், தாய் இறப்பு விகிதம் 19 சதவீதம் குறைந்துள்ளதுடன், வீட்டில் பிரசவங்கள் நடைபெறுவது 36 சதவீதத்துக்கும் மேலாக சரிந்துள்ளது. கருச்சிதைவுகள் 28 சதவீதம், பிறந்த குழந்தை இறப்பு 17 சதவீதம், குழந்தை இறப்பு 19 சதவீதம் குறைந்துள்ளது. தாய் - சேய் ஆரோக்கியக் குறீயீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவசர கால மருத்துவ உள்கட்டமைப்பு விரிவாக்கம், சுகாதாரப் பணியாளா்கள் அதிகரிப்பு, தாய் - சேய் நலத் திட்டங்களில் சிறப்பு கவனம் உள்ளிட்டவை இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் 108 அவசர மருத்துவச் சேவை முறை, பிற மாநிலங்கள் மற்றும் வளா்ந்து வரும் நாடுகளுக்கான முன்னுதாரணமாக அமையக்கூடும் என ஆராய்ச்சியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.