நிதிநிலை அறிக்கையில் கல்வி, நூலகத் துறைக்கு தமிழக முதல்வர் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் தமிழக வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூர் மாவட்ட நுலகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற உலக புத்தக தின விழாவில் அவர் மேலும் பேசியது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம் கல்வி மற்றும் நூலகத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடுகளைத் தந்து வளர்ச்சிப் பெறச் செய்து வருகிறார்.
ஒரு நாடு வளம் பெற வேண்டுமானால் அங்குள்ள நாட்டு மக்கள் கல்வியோடு இணைந்த அறிவு பெற வேண்டும்.
இதற்கு அடித்தளமாக அமையும் புத்தகங்கள், நூல்கள், நூலகங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இதனடிப்படையில் பல்வேறு புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் கிராமப்புற மக்களும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமப்புறங்களிலும், உட்புற நூலகங்களை அமைத்து தேவையான புத்தகங்களை வாங்கிப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பயன்படுத்தி பொதுமக்கள் குறிப்பாக, மாணவ, மாணவிகள் கல்வியில் எழுச்சிப் பெற வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தலைமை வகித்தார். பின்னர், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், மாவட்ட நூலக அலுவலர் இரா. செல்லாள், மாவட்ட நூலகர் மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (30.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (31.05.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (31.05.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (31.05.2026) - மேஷம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


