ஐப்பசி மாத அமாவாசையையொட்டி தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீசுவரர் கோயிலில் குபேர யாகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசையன்று யாகம் நடைபெறும். இதில், ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று நடைபெறும் குபேர யாகம் பிரசித்தி பெற்றது.
நிகழாண்டு ஐப்பசி மாத அமாவாசை தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வியாழக்கிழமை வந்தது.
இதையொட்டி, தஞ்சபுரீசுவரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற யாகத்தில் ஹோம பொருள்கள், பழங்கள் போன்றவை போடப்பட்டன.
முன்னதாக, கோயிலில் உள்ள குபேரனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் போன்ற 11 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், தஞ்சபுரீசுவரர், ஆனந்தவல்லி அம்மன், குபேர மகாலட்சுமிக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
மேலும், பச்சை நிற 11 அகல் விளக்குகளில் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.