நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குடந்தையில் விஏஓ-க்கள் ஆர்ப்பாட்டம்

மக்கள் குறைதீர் முகாம் செலவினத் தொகை வழங்கக் கோரி,  கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:50 am IST

மக்கள் குறைதீர் முகாம் செலவினத் தொகை வழங்கக் கோரி,  கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட- கோட்ட மாறுதல் கேட்டு மனு செய்துள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக பணிமாறுதல் வழங்க வேண்டும். மக்கள் குறைதீர்  முகாம் செலவினத் தொகை வழங்க வேண்டும். 
இணையதள செலவினத் தொகையை வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் ஆய்வுக்கு வரக்கூடாது. மணல் திருட்டில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலரை மட்டும் காரணம் காட்டாமல் காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினரையும் சேர்த்து மணல் திருட்டை பிடிக்க ஆவணம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
இதில்  முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.