மக்கள் குறைதீர் முகாம் செலவினத் தொகை வழங்கக் கோரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட- கோட்ட மாறுதல் கேட்டு மனு செய்துள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக பணிமாறுதல் வழங்க வேண்டும். மக்கள் குறைதீர் முகாம் செலவினத் தொகை வழங்க வேண்டும்.
இணையதள செலவினத் தொகையை வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் ஆய்வுக்கு வரக்கூடாது. மணல் திருட்டில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலரை மட்டும் காரணம் காட்டாமல் காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினரையும் சேர்த்து மணல் திருட்டை பிடிக்க ஆவணம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை: அரசாணை வெளியீடு
வரலாற்று மாற்றம்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
