ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் திங்கள்கிழமை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:43 am IST

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் திங்கள்கிழமை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம் வட்டம்,  திருமண்டங்குடியிலுள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம்.  நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன் அந்த ஆலையின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலை நிர்வாகத்திடம் பேசி, சுமூக தீர்வு காண உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.