நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் திங்கள்கிழமை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம் வட்டம், திருமண்டங்குடியிலுள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன் அந்த ஆலையின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலை நிர்வாகத்திடம் பேசி, சுமூக தீர்வு காண உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக அமைச்சர்களைச் சந்தித்தார் பாடகர் வேடன்!

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை!

பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


