தஞ்சாவூர் அருகே வல்லம் திருக்கானூர்பட்டி மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர் (47). விவசாயி. இவரது மனைவி டைனஸ் மேரி (37). சித்தாள் வேலை செய்து வந்தார். இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
சனிக்கிழமை வேலைக்குச் சென்ற டைனஸ் மேரி வீடு திரும்பவில்லை. இந்நிலையில், திருக்கானூர்பட்டியில் உள்ள ஆரோக்கியசாமி என்பவரின் வயலில் அவரின் சடலம் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. தகவலின்பேரில், ஜான் பீட்டரும், வல்லம் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். டைனஸ் மேரியின் உடலில் வேறு எந்த காயங்களும் இல்லாத நிலையில், அவரது மூக்கிலிருந்து ரத்தம் வடிந்துள்ளது. புடவை மட்டும் அலங்கோலமாகக் கிடந்துள்ளது. தனது மனைவி சாவில் மர்மம் உள்ளதாக ஜான்பீட்டர் அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து வல்லம் போலீஸார் விசாரிக்கின்றனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகே விவரங்கள் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு

12 இடங்களில் வெய்யில் சதம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

