வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டியில்  விலக்கு அளிக்க வலியுறுத்தல்

அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 8:43 am IST

அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சம்மேளனத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் கோதுமைக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையான வரிவிலக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 277 வேளாண்மை விற்பனைக் கூடங்களையும் தமிழக அரசு நவீன கட்டமைப்பு வசதிகளுடன் மாற்றி அமைக்க வேண்டும். தமிழகத்தில் நெல், அரிசியைப் பொருத்தவரை பற்றாக்குறை மாநிலமாக இருந்து வந்தது. பிற மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரம், கர்நாடகம் ,மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து நெல், அரிசியைக் கொண்டு வந்து தமிழக மக்களின் தேவையை நிறைவு செய்து வருகிறோம். இந்நிலையில், வேளாண்மை அதிகாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்து எடுத்து வரும் நெல், அரிசி லாரிகளை மறித்து சந்தைக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
இதேபோல, வேளாண் விளைபொருட்களை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அரிசி ஆலைகளுக்கு லாரியில் எடுத்து வரும்போதும், அரிசி ஆலைகளில் இருப்பு வைத்துள்ள நெல்லுக்கும் சந்தை கட்டணம் வசூலிக்கப்படுவதை  தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மாநில சம்மேளனத் தலைவர் துளசிங்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஏ.சி. மோகன், பொருளாளர் சி.பி. சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் பி.கே.வி.எஸ். வாசன், தமிழ்நாடு அரசு முகவர்கள் சங்கங்களின் சம்மேளன ஆலோசகர் சந்திரசேகரன், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட அரைவை முகவர்கள் சங்கத் தலைவர் எஸ். விஜயகுமார், செயலர் எஸ்.எம். குணசேகரன், பொருளாளர் வி. பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.