தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டியில்  விலக்கு அளிக்க வலியுறுத்தல்

அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 8:43 am IST

அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சம்மேளனத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் கோதுமைக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையான வரிவிலக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 277 வேளாண்மை விற்பனைக் கூடங்களையும் தமிழக அரசு நவீன கட்டமைப்பு வசதிகளுடன் மாற்றி அமைக்க வேண்டும். தமிழகத்தில் நெல், அரிசியைப் பொருத்தவரை பற்றாக்குறை மாநிலமாக இருந்து வந்தது. பிற மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரம், கர்நாடகம் ,மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து நெல், அரிசியைக் கொண்டு வந்து தமிழக மக்களின் தேவையை நிறைவு செய்து வருகிறோம். இந்நிலையில், வேளாண்மை அதிகாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்து எடுத்து வரும் நெல், அரிசி லாரிகளை மறித்து சந்தைக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
இதேபோல, வேளாண் விளைபொருட்களை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அரிசி ஆலைகளுக்கு லாரியில் எடுத்து வரும்போதும், அரிசி ஆலைகளில் இருப்பு வைத்துள்ள நெல்லுக்கும் சந்தை கட்டணம் வசூலிக்கப்படுவதை  தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மாநில சம்மேளனத் தலைவர் துளசிங்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஏ.சி. மோகன், பொருளாளர் சி.பி. சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் பி.கே.வி.எஸ். வாசன், தமிழ்நாடு அரசு முகவர்கள் சங்கங்களின் சம்மேளன ஆலோசகர் சந்திரசேகரன், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட அரைவை முகவர்கள் சங்கத் தலைவர் எஸ். விஜயகுமார், செயலர் எஸ்.எம். குணசேகரன், பொருளாளர் வி. பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.