தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

குடந்தை வேங்கடரமண பாகவதரின் 41ஆவது ஆண்டு மகோத்ஸவ இசைவிழா தொடக்கம்

கும்பகோணத்தில் வேங்கடரமண பாகவதரின் 41ஆவது ஆண்டு மகோத்ஸச இசை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On :23 ஜூலை 2018, 8:40 am IST

கும்பகோணத்தில் வேங்கடரமண பாகவதரின் 41ஆவது ஆண்டு மகோத்ஸச இசை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து வரும் 25 ஆம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து இசை அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
கர்நாடக இசைகளை பாடி, வளர்த்த தியாகராஜ சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் வேங்கடரமண பாகவதர்.  
இவர் சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையில் தங்கியிருந்து திருவையாறுக்கு சென்று தியாகராஜ சுவாமிகளுக்கு உதவி புரிந்துள்ளார்.
கர்நாடக இசை வளர வேங்கடரமண பாகவதரும் தொண்டுகள் புரிந்துள்ளதால், இந்த சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் இசை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 237 வது திருநட்சத்திர தினத்தையொட்டி கும்பகோணத்தில் 41 வது ஆண்டாக பிர்மன் கோயில் தெரு வேதநாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகோத்சவ இசைவிழா தொடங்கியது.
மாலையில் வேங்கடரமண பாகவத சுவாமிகளுக்கு விசேஷ திருமஞ்சனம், ஆராதனையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 23 ஆம் தேதி மாலை சென்னை வி. சங்கரநாராயணன் குழுவினரின் பாட்டும், 24 ஆம் தேதி மாலை  திருவிடைமருதூர் ஏ. சிவகாமசுந்தரி குழுவினரின் பாட்டும் நடைபெறவுள்ளது.
25 ஆம் தேதி காலை வேங்கடரமண பாகவதர் சுவாமிகளின் வீதியுலாவும்,  தொடர்ந்து கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து வேங்கடரமண பாகவதருக்கு இசையஞ்சலியும் செலுத்தப்பட உள்ளது. 
26 ஆம் தேதி மாலை ஆஞ்சநேயர் உற்சவ பஜனையுடன் விடையாற்றி உத்சவத்துடன் விழா நிறைவடைகிறது.  விழா  ஏற்பாடுகளை வேங்கடரமண பாகவதர் அறக்கட்டளை செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.