கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ரயிலில் அடிபட்ட ஆசிரியர் சாவு

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை மாலை ரயிலில் அடிபட்ட பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.

Updated On :23 ஜூலை 2018, 8:42 am IST

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை மாலை ரயிலில் அடிபட்ட பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.
திருவையாறு ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ராஜமூர்த்தி (54). இவர் திருவையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் சனிக்கிழமை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனிடையே, திட்டை - தஞ்சாவூர் இடையே வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, தண்டவாளப் பகுதிக்குச் சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த தஞ்சாவூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் அடிபட்டார். இதில், பலத்தக் காயமடைந்த ராஜமூர்த்தி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீஸார் விசாரித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.