தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை மாலை ரயிலில் அடிபட்ட பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.
திருவையாறு ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ராஜமூர்த்தி (54). இவர் திருவையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் சனிக்கிழமை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனிடையே, திட்டை - தஞ்சாவூர் இடையே வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, தண்டவாளப் பகுதிக்குச் சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த தஞ்சாவூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் அடிபட்டார். இதில், பலத்தக் காயமடைந்த ராஜமூர்த்தி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீஸார் விசாரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






