குக்கர் சின்னத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை. மீண்டும் விசாரிக்கவே உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
இதுகுறித்து தஞ்சாவூரில் புதன்கிழமை அவர் தெரிவித்தது: உச்ச நீதிமன்றத்தில் குக்கர் சின்னத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதை முக்கிய வழக்காக எடுத்துக் கொண்டு, அமர்வு அமைத்து விசாரித்து ஏப்.30-க்குள் தீர்ப்பு வழங்குமாறு தில்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஆர்.கே. நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அவர்களைத் (அதிமுகவினர்) தோற்கடித்தோம். அடுத்த 3 வாரங்களுக்குள் எங்களது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க இருந்தது. இந்த அச்சம் காரணமாக அவர்கள் நீதிமன்றத்தை அணுகினர். தீர்ப்பு நகல் இன்னும் என் கைக்குக் கிடைக்கவில்லை. அதை முழுமையாகப் படித்த பிறகுதான் மேலும் விவரங்கள் தெரியவரும் என்றார் தினகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

