முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சாவூர் ரயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையிலும், மேலவீதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையிலும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் உள்ள தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ராஜீவ் காந்தியின் உருவபடத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆர். லோகநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி செலுத்தி தீவிரவாத எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும் உறுதிமொழியை ஏற்றனர். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் அய்யப்பன், நகரத் தலைவர் மிர்சாவுதீன், வட்டார தலைவர்கள் பாலதண்டாயுதம், நாராயணசாமி, மகாதேவன், அசோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 செய்திகள் - நேரலை!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

பேரவைத் தேர்தல்: மநீம தலைவர் கமல் வாக்களித்தார்!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

