பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியன இணைந்து நடத்தின.
முகாமில் பங்கேற்ற 224 பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 116 பேருக்கு கண் அறுவை சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, அவர்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமுக்கு மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.எஸ்.வீரப்பன் தலைமை வகித்தார். தொழிலதிபர் கே.பாரத் முகாமைத் தொடங்கி வைத்தார். லாரல் பள்ளித் தாளாளர் வி.பாலசுப்பிரமணியன், மனோரா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் கே.விவேகானந்தன், ஆர்.கே.பி.சந்திரசேகரன், ஏ.என்.ராஜேந்திரன், அ.பூவலிங்கம், ஆர்.ஜெயவீரபாண்டியன், ஆர்.அண்ணாதுரை, சங்க செயலர் எஸ். சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

கருவேப்பிலைப்பாளையம் தா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா
பெட்டிக்கடையை சேதப்படுத்திய இளைஞா் கைது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

