நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மாணவர்களுக்கு  கல்வி உதவித் தொகை அளிப்பு

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:51 am IST

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கும்பகோணத்திலுள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட செயலாளர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் பைசல் முஹம்மது, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் மாவட்ட செயலாளர் மெளலவி மாலிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா  மற்றும் ஆக்சிஸ் இந்தியாவின் பயிற்றுவிப்பாளர் நூருல்லாஹ்  ஹூசைன் ஆகியோர் 25 மாணவர்களின் உயர்கல்விக்காக ரூ. 2.50 லட்சம் உதவித்தொகையை காசோலையாக வழங்கினர். 
முன்னதாக,  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜீத் வரவேற்றார். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் பக்ருதீன்  வாழ்த்தி பேசினார். நிறைவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது சயீப் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.