தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாபேட்டை பகுதி நல்லவன்னியன் குடிகாடு நத்தம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மகன் பிரபாத் (29). இவர் 2010, ஏப். 22-ம் தேதி மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, செண்பகபுரம் சண்முகநாதன் நகரைச் சேர்ந்த செல்வம் மகன் சுரேஷ் (34) சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சுரேஷை பிரபாத் முந்தி சென்றார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், பிரபாத்தை சுரேஷ் அரிவாளால் வெட்டினார். இதில் பிரபாத் பலத்தக் காயமடைந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த சுரேஷை 2018 ஆம் ஆண்டில் கைது செய்தனர். இதுதொடர்பாக கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி அய்யப்பன் பிள்ளை விசாரித்து, சுரேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


