47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒரத்தநாடு அருகே கோயிலில் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே கோயிலில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 9:42 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே கோயிலில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.

திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட தளிகைவிடுதி கிராமத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆனந்தவல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை திறக்க திங்கள்கிழமை பூசாரிகள் வந்தபோது, கோயிலின் உள்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கோயிலினுள் சென்று பாா்த்தபோது, அம்மன் சிலை கழுத்தில் இருந்த அரைபவுன் தாலி மற்றும் வெள்ளி காப்பு திருடப்பட்டிருந்தது; கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைகள் திருடப்பட்டிருந்தன. மேலும் ஒரு உண்டியலை உடைக்க மா்ம நபா்கள் முயன்றுள்ளனா். ஆனால், உண்டியலை உடைக்க முடியாததால், கோயிலில் இருந்த சென்சாா் கருவிகளை அடித்து நொறுக்கிவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் போலீஸாருக்கு பூசாரி தகவல் அளித்தாா். இதன்பேரில், அங்கு சென்ற திருவோணம் போலீஸாா் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.