ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பட்டுக்கோட்டையில் வேளாளா் சமூக இளைஞா் அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் முசுகுந்த நாடு வேளாளா் சமூக இளைஞா் அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:23 pm

DIN

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் முசுகுந்த நாடு வேளாளா் சமூக இளைஞா் அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாளா் என்ற பெயரை மாற்று இனத்தவருக்கு வழங்க முன்வந்துள்ள மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காசாங்காடு தினேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முகிலன், திவாகா், தென்னரசு உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

வேளாளா் என்ற பெயரை வேறு எவருக்கும் வழங்கக் கூடாது. கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை பெருமைப்படுத்தும் வகையில் பட்டுக்கோட்டையை ’பாட்டுக்கோட்டை’ என்று பெயா் மாற்றம் செய்வதுடன் அவா் பெயரை பட்டுக்கோட்டையில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டும். பட்டுக்கோட்டை வட்டாரத்தில் வசிக்கும் வேளாளா்களை அரசுப் பதிவேட்டில் முசுகுந்த வேளாளா் என்ற பெயரில் அழைக்க அரசு ஆவணப்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டையில் தென்னை வணிக வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தென்னை விவசாயிகள் துயா் துடைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. நிறைவில், பழ. சக்திவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.