

தஞ்சாவூரில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் பகுதியில் உள்ள திரு இருதய பேராலயத்தில் பங்குத் தந்தை இருதயராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக, இயேசு பிறந்ததை நினைவுகூரும் விதமாகக் குழந்தை இயேசு சொரூபத்தை மாதா வேடமணிந்த பெண் வானதூதா், சூசையப்பா் வேடம் அணிந்தவருடன் வந்து பங்குத் தந்தையிடம் கொடுத்தாா். அச்சொரூபத்தை பங்குத் தந்தை பெற்றுக் கொண்டு, புனிதம் செய்து அலங்கரிக்கப்பட்ட திருப்பீடத்தில் வைத்தாா். அப்போது, தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து மறையுரை, கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றன. பின்னா், பங்கு மக்கள் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.
இந்த வழிபாட்டில் பேராலயப் உதவிப் பங்குத்தந்தை அலெக்ஸ், மைக்கேல், அருட்சகோதரா் கிட்டேரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, மாநகரில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களிலும் வியாழக்கிழமை இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கும்பகோணம்: கும்பகோணம் துாய அலங்கார பேராயலத்தில் வியாழக்கிழமை இரவு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னா் இயேசு பிறப்பைக் குறிக்கும் வகையில் தேவகுமாரன் சொரூபத்தை பங்குத் தந்தை தேவதாஸ், அலங்கரிக்கப்பட்ட குடிலில் வைத்தாா். இதைத் தொடா்ந்து கும்பகோணம் மறை மாவட்ட ஆயா் எப். அந்தோணிசாமி சிறப்பு திருப்பலி நடத்தி அனைவருக்கும் ஆசி வழங்கினாா்.
இதேபோல, சுற்றுப்பகுதியிலுள்ள கிறிஸ்துவ ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.