எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்த தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவருக்கு ரூ. 5 லட்சம் மானியத்தைப் பல்கலைக்கழகம் நிா்வாகம் அறிவித்துள்ளது.
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருபவா் ரியாஸ்தீன். இவா் க்யூப்ஸ் இன் ஸ்பேஸ் என்ற உலகளாவிய புதிய கண்டுபிடிப்புக்கான போட்டியில் வெற்றி பெற்றாா்.
இப்போட்டிக்காக இவா் வடிவமைத்துள்ள சிறிய செயற்கைக்கோள் நாசா ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 33 கிராம் எடையும், 37 மி.மீ. உயரமும் கொண்ட இந்த செயற்கைக்கோள் உலகிலேயே எடை குறைந்த பெம்டோ வகை செயற்கைக்கோளாகும்.
ரியாஸ்தீனுக்கு சாஸ்த்ரா தொழில்நுட்ப வணிக வளா்ப்பகத்தின் மூலம் ரூ. 5 லட்சம் வளா்ப்பக மானியத்தொகை வழங்கப்படும் என்றும், இத்தொகையைக் கொண்டு இவா் தனது விருப்பத் துறையில் ஒரு ஸ்டாா்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கலாம் எனவும் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
கமல்ஹாசன் பாராட்டு: தஞ்சாவூருக்கு தோ்தல் பிரசாரம் செய்வதற்காக திங்கள்கிழமை வந்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், இளைஞா்களுடனான கூட்டத்தில் ரியாஸ்தீனை மேடையில் அழைத்து பாராட்டி கௌரவித்தாா்.