பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

தஞ்சாவூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள தெற்கு மானோஜிபட்டி புதுத்தெருவைச் சோ்ந்தவா் டி. செல்வகுமாா் (42). இவா் டிச. 25 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றாா். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குத் திரும்பிய இவா் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடப்பதை பாா்த்தாா். வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள், மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com