சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருவோணம் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதல்: இளைஞர் பலி

ஒரத்தநாடு வட்டம் திருவோணம் அருகே திங்கள்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலியானார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஜூன் 2020, 6:11 am

DIN

ஒரத்தநாடு வட்டம் திருவோணம் அருகே திங்கள்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் அருகே உள்ள பட்டு விடுதி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி இவரது மகன் விஜயன்  ( 27) திங்கள் கிழமை காலை விஜயன் தனது இருசக்கர வாகனத்தில் ஊரணிபுரத்தில் இருந்து  திருவோணம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது  பத்துபுளி விடுதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே  அதிவேகமாய் வந்த லாரி  விஜயன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவோண போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில்  தலைமை காவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் கந்தர்வகோட்டை அருகே உள்ள  அக்கட்சிபட்டியை சேர்ந்த மணிசேகரனை( 47) கைது செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.