கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தஞ்சாவூர், திருவையாற்றில் இடியுடன் கூடிய மழை

தஞ்சாவூர், திருவையாற்றில் ஒரு வாரத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

News image
Updated On :5 ஜூன் 2020, 3:08 pm

தஞ்சாவூர், திருவையாற்றில் ஒரு வாரத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு வெயில் கடுமையாக இருப்பதால், இரவில் புழுக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதேபோல, வெள்ளிக்கிழமை பகலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

Story image

இந்நிலையில், திருவையாற்றில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்தது. சுமார் அரை மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய சற்று பலத்த மழை பெய்தது. இதனால், மின் தடை ஏற்பட்டது. இதேபோல, தஞ்சாவூரிலும் பலத்த இடி சப்தத்துடன் இரவு 7 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.

சுமார் அரை மணிநேரம் பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த நிலை ஏற்பட்டது. மேலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.