அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மைப் பணி

திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீர் வரவுள்ளதையொட்டி, குப்பைகளை அகற்றும் விதமாக தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து

News image
Updated On :14 ஜூன் 2020, 3:03 pm IST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீர் வரவுள்ளதையொட்டி, குப்பைகளை அகற்றும் விதமாக தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணையிலிருந்து பாசனத்துக்காகத் செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.

இதை முன்னிட்டு திருவையாறு  காவிரி ஆற்றில் திருவையாறு பேருராட்சி நிர்வாகத்துடன் இணைந்து திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா காவேரி அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.  திருவையாறு ஓடத்துறை படித்துறை, புஷ்ய மண்டபப் படித்துறை, கல்யாண மகால் படித்துறை, திருமஞ்சன வீதி படித்துறை ஆகிய பகுதிகளில் டன் கணக்கில் குவிந்த ஏராளமான குப்பைகள் அகற்றப்பட்டன. 

அப்போது காவிரி ஆற்றின் தூய்மையைக் காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்பகுதி மக்களிடம் காவேரி தூய்மையைக் காப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. இப்பணியில் திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், தஞ்சாவூர் நியூடவுன் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் பர்சனாலிடி பிளஸ் ஜேசிஐ சங்கம், திருவையாறு  காந்தி பாரதி இளைஞர் மன்றம், வைத்தியநாதன்பேட்டை ஜீவா பாரதி இளைஞர் மன்றம், தெருவாசிகள் நலசங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.