தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீர் வரவுள்ளதையொட்டி, குப்பைகளை அகற்றும் விதமாக தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணையிலிருந்து பாசனத்துக்காகத் செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.
இதை முன்னிட்டு திருவையாறு காவிரி ஆற்றில் திருவையாறு பேருராட்சி நிர்வாகத்துடன் இணைந்து திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா காவேரி அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். திருவையாறு ஓடத்துறை படித்துறை, புஷ்ய மண்டபப் படித்துறை, கல்யாண மகால் படித்துறை, திருமஞ்சன வீதி படித்துறை ஆகிய பகுதிகளில் டன் கணக்கில் குவிந்த ஏராளமான குப்பைகள் அகற்றப்பட்டன.
அப்போது காவிரி ஆற்றின் தூய்மையைக் காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்பகுதி மக்களிடம் காவேரி தூய்மையைக் காப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. இப்பணியில் திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், தஞ்சாவூர் நியூடவுன் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் பர்சனாலிடி பிளஸ் ஜேசிஐ சங்கம், திருவையாறு காந்தி பாரதி இளைஞர் மன்றம், வைத்தியநாதன்பேட்டை ஜீவா பாரதி இளைஞர் மன்றம், தெருவாசிகள் நலசங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து: பணியாளர் பலி

அஜித்தின் தாயார் உடலுக்கு நாசர் அஞ்சலி!

பாகிஸ்தான் பந்துவீச்சு: ஆஸி. அணியில் அறிமுகமான யு19 வீரர் ஆலிவர் பீக்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



