தஞ்சாவூரில் பொது முடக்கம் காரணமாக இஸ்லாமியர்கள் வீட்டிலேயே ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகையை திங்கள்கிழமை மேற்கொண்டனர்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று சிறப்புத் தொழுகை மேற்கொள்வது வழக்கம். தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால், கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
எனவே நிகழாண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் மாத நோன்பைக் கடைப்பிடித்து, தங்களது வீட்டிலேயே தொழுகையை மேற்கொள்ளுமாறு மத குருமார்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்படி இஸ்லாமியர்களும் தங்களது வீட்டிலேயே ரமலான் மாத நோன்பை ஏப். 24-ம் தேதி தொடங்கி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நோன்பு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் தங்களது வீட்டிலேயே குடும்பத்தோடும், உறவினர்களுடன் இணைந்தும் சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனர். தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


