டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி முடிக்கப்படும் 

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி முடிக்கப்படும் என்றார் வேளாண் துறைச் செயலரும், தூர்வாரும் பணி சிறப்புக் கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப் சிங் பேடி.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:41 pm

DIN

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி முடிக்கப்படும் என்றார் வேளாண் துறைச் செயலரும், தூர்வாரும் பணி சிறப்புக் கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப் சிங் பேடி.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து வரும் அவர் தென்னமநாடு கிராமத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 

மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறப்பதற்குத் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணிக்காக ரூ. 67 கோடியும், குடிமராமத்து பணிக்காக கிட்டதட்ட ரூ. 500 கோடியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை மூலம் ரூ. 58 கோடி மதிப்பில் 274 பணிகள்  மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், ஊரக வளர்ச்சித் துறை மூலம் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.137 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வருவதற்கு முன்பாக அனைத்து ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்கள் தரமாகத் தூர் வாரப்படும்.  

குறிப்பாக கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றடைவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அலுவலர்கள் முழுவீச்சில் பணியாற்ற வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது  என்றார் ககன்தீப் சிங் பேடி.

அப்போது மாவட்ட ஆட்சியர் ம கோவிந்த ராவ், பொதுப் பணித் துறைக் கண்காணிப்புப்  பொறியாளர் அன்பரசன்,  வேளாண் துறை இணை இயக்குநர் அ. ஜஸ்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.