பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே முகநூலில் குழந்தைகளின் ஆபாச படங்களைப் பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பாக தந்தை - மகனை காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகளவில் வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதால் பாலியல் வன்முறைகள் அதிகரிக்கின்றன. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களைப் பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பாக ஏற்கெனவே சிலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதுதொடர்பாக வலைதளங்களைக் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் பண்டாரவாடை கிராமத்தில் முகநூலில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்வது காவல் துறையினருக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்து பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் மேற்கொண்ட விசாரணையில் பண்டாரவாடையைச் சேர்ந்த ஒருவரின் செல்லிடப்பேசியிலிருந்து பதிவேற்றமாகியிருப்பதும், இவருடைய செல்லிடப்பேசியிலிருந்து இவரது 16 வயதுடைய மகன் பதிவேற்றம் செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிந்து தந்தை, மகனை புதன்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த மடிக்கணினி மற்றும் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


