தஞ்சாவூா் அருகேயுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பொதுமக்கள் பாா்வைக்காக செவ்வாய்க்கிழமை (நவ.10) முதல் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன் தெரிவித்திருப்பது:
கரோனா நோய்த் தொற்று காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கும்.
வழக்கம்போல காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவா். அனைவரும் முகக் கவசம் அணிந்தும் மற்றும் தொற்று நோய்த் தடுப்பு முறைகளைக் கடைப்பிடித்தும் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.