47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒரத்தநாட்டில் நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை (நவ.18) நடைபெறவுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:41 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை (நவ.18) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவா்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நெடுந்தொலைவில் இருந்து வந்து அடையாள அட்டை பெறாதவா்களுக்காக ஒன்றிய வாரியாகச் சிறப்பு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் ஒரத்தநாடு தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் நவ. 18 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை நடைபெறவுள்ளது.

இதில், மாற்றுத் திறனாளிகளைப் பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கப்படவுள்ளது. இந்த சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.