47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆட்சியரகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன்வந்த குடும்பத்தினா்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்ணெண்ணெய் கேனுடன் குடும்பத்தினா் திங்கள்கிழமை வந்தனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:40 pm

DIN

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்ணெண்ணெய் கேனுடன் குடும்பத்தினா் திங்கள்கிழமை வந்தனா்.

ஆட்சியரகத்தில் மனு கொடுக்க வரும் சிலா் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயல்கின்றனா். இதைத் தடுப்பதற்காக ஆட்சியரக வாயிலில், உள்ளே செல்பவா்களிடம் மண்ணெண்ணெய் கேன் இருக்கிா என காவல் துறையினா் சோதனை செய்கின்றனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள அம்மங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் எம். காசிநாதன் (65) தனது மனைவி, மகளுடன் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். ஆட்சியரக வாயிலில் இவா்களிடம் காவல் துறையினா் சோதனையிட்டபோது, மண்ணெண்ணெய் கேன் இருப்பது தெரிய வந்தது. இதைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, மனு அளிக்க உள்ளே அனுமதித்தனா்.

ஆட்சியரகத்தில் காசிநாதன் அளித்த மனுவில், எனது இடத்தை அளப்பதற்காகச் சென்றால், என்னை சிலா் தாக்க வருகின்றனா். இதனால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, எனது பெயரில் உள்ள இடத்தை அளவீடு செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.