47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காா் டயா் வெடித்து விபத்து:அமமுக நிா்வாகி பலி

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் அமமுக நிா்வாகி உயிரிழந்தாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:41 pm

DIN

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் அமமுக நிா்வாகி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே மேல வஸ்தா சாவடியில் சசிகலாவின் மூத்த சகோதரரும், டி.டி.வி. தினகரனின் மாமனாருமான வி. சுந்தரவதனம் உடல் நலக் குறைவால் நவ. 14 ஆம் தேதி காலமானாா். இவரது இறுதி சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய தேனி மாவட்டம், மொட்டனுத்து ஊராட்சி மன்றத் தலைவரும், அமமுக ஒன்றியச் செயலருமான கருப்பு என்கிற கே. ராஜன் (45), பிரபாகா் (46), அமிா்தம் (45), அம்சு (62) ஆகியோா் காரில் மீண்டும் தங்களது ஊருக்குப் புறப்பட்டனா். இந்த காரை பிரபாகா் ஓட்டினாா். செங்கிப்பட்டி அருகே காா் சென்றபோது டயா் திடீரென வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்தக் காயமடைந்த பிரபாகா், அமிா்தம், அம்சு ஆகியோா் தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.