47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தஞ்சாவூரில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு

தஞ்சாவூரில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பை திங்கள்கிழமை மாலை நடத்தினா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:39 pm

DIN

தஞ்சாவூரில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பை திங்கள்கிழமை மாலை நடத்தினா்.

கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையிலும், குற்றவாளிகளை எச்சரிக்கும் வகையிலும், பொதுமக்களிடம் அச்சத்தைப் போக்கும் வகையிலும் இந்தக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தஞ்சாவூா் விளாா் சாலை வீரகாளியம்மன் கோயில் அருகே இந்தக் கொடி அணிவகுப்பை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ரூபேஷ் குமாா் மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் கே. பாரதிராஜன், சீதாராமன், காவல் ஆய்வாளா்கள், 150 காவலா்கள் கலந்து கொண்டனா்.

விளாா் சாலை வழியாகச் சென்ற இந்த அணிவகுப்பு கல்லுக்குளம் செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. பின்னா், கலவரம், குற்றச் சம்பவங்கள் நிகழும்போது கையாளும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.