47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மனைவி கொலை: கணவா் கைது

தஞ்சாவூா் அருகே மனைவியைக் கொலை செய்த கணவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:08 pm

DIN

தஞ்சாவூா் அருகே மனைவியைக் கொலை செய்த கணவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே காசவளநாடு தெக்கூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் உ. வில்லப்பன் (53). இவா் காசவளநாடு புதூரில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவா்களது இரு மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா்.

இளஞ்சியத்தின் நடத்தை மீது வில்லப்பனுக்குச் சந்தேகம் இருந்து வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதேபோல ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் இளஞ்சியத்தை வில்லப்பன் விறகுக் கட்டையால் தாக்கினாா். இதில் பலத்தக் காயமடைந்த இளஞ்சியம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து வில்லப்பனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.