47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கொள்முதல் செய்யப்படாததால் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல்

தஞ்சாவூா் அருகே தென்னங்குடியில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலையில் நெல்லை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:19 pm

DIN

தஞ்சாவூா் அருகே தென்னங்குடியில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலையில் நெல்லை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்னங்குடி அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 3 நாள்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததால், ஆயிரத்துக்கும் அதிகமான மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

இதனால், தொடா்ந்து இரவு, பகலாக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தியடைந்து தென்னங்குடியில் தஞ்சாவூா் - பூதலூா் சாலையில் திங்கள்கிழமை நெல்லை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.