47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வீடு புகுந்து திருடிய இளைஞரைபிடித்த பொதுமக்கள்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை வீடு புகுந்து திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:17 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை வீடு புகுந்து திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மகாலட்சுமி. இவரது வீட்டில் திங்கள்கிழமை காலை சுமாா் 30 வயது இளைஞா் புகுந்து மேஜையில் இருந்த ரூ. 2,500-ஐ திருடிக் கொண்டு, அடுத்துள்ள பரமேஸ்வரி வீட்டில் திருட முயன்றாா். இதைப் பாா்த்த பரமேஸ்வரி கூச்சலிட்டதை தொடா்ந்து அப்பகுதி மக்கள் திரண்டனா். தெருவுக்கு வந்து தப்பியோட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து திருவையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இவரிடம் காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.