தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035 ஆவது சதய விழா திங்கள்கிழமை காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மங்கள இசையுடன் தொடங்கிய இந்த விழாவில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் மாலை அணிவித்தார். தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்குப் பேரபிஷேகம் நடைபெறுகிறது.

இரவு 8 மணிக்கு மேல் கோயில் வளாகத்திலுள்ள உள் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் இவ்விழா இருநாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக அரசு சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. இதனால் கலை நிகழ்ச்சிகள், திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டார்வின் (வாழ்வும் அறிவியலும்)

தமிழ்ப் பெருவெளியில் இசுலாமியப் பேரொளி

கற்பின் கொழுந்து கண்ணகி தெய்வம்!

வரப்பெற்றோம் (07-04-2026)
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


