ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுக்கூர் கோவிலில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

தஞ்சாவூர் மதுக்கூரில் உள்ள கோவிலில் மர்மநபர்கள் புகுந்து தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

News image
கொள்ளை நடைபெற்ற  மாரியம்மன் கோயில்
Updated On :5 செப்டம்பர் 2020, 1:01 pm

DIN

தஞ்சாவூர் மதுக்கூரில் உள்ள கோவிலில் மர்மநபர்கள் புகுந்து தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் அருள்மிகு முளைக்கொட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கோயில் பூசாரி அம்மனுக்கு பூஜை முடித்து கோவிலைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Story image

மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட நகைப்பெட்டகம்

அதன்பின்னர், நள்ளிரவுக்கு மேல் மர்ம நபர்கள் சிலர் வடக்குப்புறத்திலுள்ள கோவிலின் கதவின் பூட்டை உடைத்துக் கோயிலுக்குள்  புகுந்து, விழா காலங்களில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் இருந்த பெட்டகத்தை உடைத்துள்ளனர். பின் அதிலிருந்த 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5,000 ரொக்கம் ஆகியவற்றையும்,  அடுத்து, கோயில் கருவறை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த அரை பவுன் தாலியையும் திருடிச் சென்று விட்டனர்.

நடந்த திருட்டு சம்பவத்தை சனிக்கிழமை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் காவல்துறையினரிடம் புகாரளித்தனர்.

இதுகுறித்துத் தகவலறிந்ததும் பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் மதுக்கூர் காவல்துறையினர் சனிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

மேலும் தடயவியல் நிபுணர்கள் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து, கோயில் நிர்வாகக்குழுத் தலைவர் அ.வைரவசுந்தரம் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில் மதுக்கூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.