நெம்மேலி அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கோ பூஜை விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நெம்மேலி கிராமத்திலுள்ள உண்ணாமலை தாயார் உடனுறை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத கடைசியில் உலக நன்மைக்காக பசு மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடும் கோ பூஜை விழாவை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, நிகழாண்டு கோ பூஜை விழா ஞயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில், உலக நன்மைக்காகவும் இன்று நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் வெற்றி பெறவும், கரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் விடுபடவும் வேண்டி கொல்லிமலை சித்தர் தலைமையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தி, கிராம பொது மக்களால் கொண்டு வரப்பட்ட 108 பசு மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோ பூஜை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் பொதுமக்கள் கொண்டு வந்திருந்த பசு மாடுகளுக்கு கோயில் நிர்வாகத்தினர் மாலை அணிவித்து, குங்குமம் இட்டு மரியாதை செய்தனர். அதன்பின் மாடுகளின் உரிமையாளர்கள் பசு மாடுகளுக்கு மலர்கள் தூவியும் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டியும் வழிபட்டனர். நெம்மேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


