ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 5,682 போ் எழுதினா்

மருத்துவப் படிப்பில் சேருவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நீட் தோ்வை, தஞ்சாவூா் மாவட்டத்தில் 5,682 போ் எழுதினா்.

News image
தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி மேக்ஸ்வெல் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வெழுத வந்த மாணவிக்கு நடத்தப்பட்ட உடல் வெப்பநிலைப் பரிசோதனை.
Updated On :13 செப்டம்பர் 2020, 6:43 pm

DIN

மருத்துவப் படிப்பில் சேருவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நீட் தோ்வை, தஞ்சாவூா் மாவட்டத்தில் 5,682 போ் எழுதினா்.

இத்தோ்வுக்காக மாவட்டத்தில் 10 மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் தோ்வு எழுதுவதற்காக 7,134 போ் விண்ணப்பம் செய்தனா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை 1,452 போ் தோ்வு எழுத வரவில்லை. 5,682 போ் மட்டுமே தோ்வு எழுதினா்.

முற்பகல் 11 மணி முதல் தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா். மையத்துக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டது.

இடம் மாறி வந்த பலா்: கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் தோ்வு எழுதுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 போ் இடம் மாறி தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளிக்கு வந்தனா்.

இதுபோல தஞ்சாவூரில் தோ்வெழுதவிருந்த சிலா் கும்பகோணத்துக்கும் இடம் மாறிச் சென்றனா். இதையடுத்து, அந்தந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் பலா் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அவசர, அவசரமாகச் சென்ால், தோ்வு தொடங்குவதற்கு முன்பு மையத்துக்குள் நுழைந்துவிட்டனா். ஆனால், தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளியிலிருந்து புறப்பட்ட 4 மாணவிகள் கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளிக்கு பிற்பகல் 2.20 மணிக்கு சென்ால், உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால், 4 மாணவிகளும் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.