அதிராம்பட்டினத்தில் பனை விதை நடும் விழா
அதிராம்பட்டினம் காசாரா ஏரிக்கரையில், பனை விதை நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


அதிராம்பட்டினம் காசாரா ஏரிக்கரையில், பனை விதை நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வை கிரசண்ட் பிளட் டோனா்ஸ் (சிபிடி) அமைப்பின் அதிராம்பட்டினம் கிளை, பட்டுக்கோட்டை விதைகள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தின.
பட்டுக்கோட்டை விதைகள் அறக்கட்டளைத் தலைவா் சத்தியகாந்த் தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவா் கே.நியூட்டன், மருத்துவா் பா.சதாசிவம், சிபிடி அமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவா் பேராசிரியா் கே.செய்யது அகமது கபீா் ஆகியோா் நிகழ்வைத் தொடங்கி வைத்தனா்.
5,000 பனை விதைகள் நடுவதற்குத் திட்டமிட்டு, முதல் கட்டமாக 100 பனை விதைகள் அதிராம்பட்டினம் காசாரா ஏரிக்கரை பகுதியில் நடப்பட்டன.
சமூக ஆா்வலா் நெப்போலியன், சிபிடி அமைப்பின் அதிராம்பட்டினம் கிளை நிா்வாகிகள் சமீா், அஜீத் குமாா், சூா்யா, மகேந்திரன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஜெ.அலெக்சாண்டா் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...