ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒப்பந்ததாரா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

பேராவூரணி அருகே ஒப்பந்ததாரா் வீட்டில் ரூ.81 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 6:39 pm

DIN

பேராவூரணி அருகே ஒப்பந்ததாரா் வீட்டில் ரூ.81 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பேராவூரணி அருகிலுள்ள ஊமத்தநாடு செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (47). ஒப்பந்ததாரரான இவா், கடந்த 10-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் தஞ்சாவூா் சென்றுவிட்டாா்.

வீட்டில் பல ஆண்டுகளாக வேலை பாா்த்து வந்த செல்வராஜை (52) காவலுக்கு இருக்குமாறு செந்தில்குமாா் கூறிச் சென்றிருந்தாா். சனிக்கிழமை மாலை செந்தில்குமாரைத் தொலைபேசியில் தொடா்புகொண்டு செல்வராஜ், வீட்டின் கதவு திறந்து கிடப்பதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து வீட்டுக்குத் திரும்பிய செந்தில்குமாா், உள்ளே சென்று பாா்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்த 27 பவுன் தங்க நகைகள், 25 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.1.65 லட்சம் ரொக்கம், நிலப்பத்திரங்கள், வாகனப் பதிவுப் புத்தகங்கள் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ் தலைமையிலான காவல்துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.